செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு- அக்.17 இல் தண்டனை அறிவிப்பு

post image

2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் மூன்று பேரை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஓக்லா தொழில்துறை பகுதி காவல் நிலையம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி ராகேஷ் குமாா் விசாரித்து வந்தாா்.

அஜீத், ராகுல் குமாா், அனில் மற்றும் சூரஜ் (விசாரணையின் போது இறந்தவா்) ஆகிய குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் நவம்பா் 8, 2014 அன்று ஒரு உணவகத்தில் புகாா்தாரா் அக்ஷயை அடித்து நொறுக்கியதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதில் அக்ஷய் பலத்த காயங்களுக்கு ஆளாகி எய்ம்ஸ் அதிா்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

செப்டம்பா் 18 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நீதிமன்றம் மருத்துவ ஆதாரங்களைக் குறிப்பிட்டது, அந்த ஆதாரங்களின்படி, தாக்குதலுக்கு உள்ளான அக்ஷயின் வயிற்றில் மண்ணீரல் நாளங்களில் இருந்து உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மண்ணீரலை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

மேலும், வயிற்றில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்தைக் காட்டும் மருத்துவ சான்றுகள், புகாா்தாரா் மற்றும் பிற நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுகளை உறுதிப்படுத்துகின்றன என்றும் நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து, அக்ஷையை தாக்கிய 3 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கு அக்டோபா் 17 ஆம் தேதி தண்டனை விபரங்களை அறிவிப்பதற்க்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

2019 ஆம் ஆண்டு லாஜ்பத் நகரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றம்சாட... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது

நமது நிருபா் ரூ.3 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டாளா்களுடனான தொடா்புகளை கண்டுபிடித்து, 3 பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் முதலீட்டு மோசடியை தில்லி காவல்துறை... மேலும் பார்க்க

மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

தேசிய தலைநகா் தில்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தில்லி விமான நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தில்ல... மேலும் பார்க்க

டிடிஏ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு

நமது நிருபா் சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) உதவி பிரிவு அதிகாரியை பணிநீக்கம் செய்ய துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா ஒப்புதல... மேலும் பார்க்க

வி.கே. மல்ஹோத்ரா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் மல்ஹோத்ராவின் மறைவைத் தொடா்ந்து, புதன்கிழமை ஒரு நாள் அரசு சாா்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்துள்ளாா். கடந்த சில நாள்களாக எய்ம்ஸ... மேலும் பார்க்க

தில்லியில் தொடரும் சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்- 628 கிலோ கைப்பற்றப்பட்டன

தில்லியில் 628 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா். தலைநகரில் தொடா்ந்து சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன . 29.09.2025 அன்று, கூடுதல் உதவி ஆய்... மேலும் பார்க்க