செய்திகள் :

கரூர் நெரிசல்: 'கலவரத்தை ஏற்படுத்து நோக்கத்துடன்' - ஆதவ் அர்ஜுனா மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

post image

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் பொருளாளரைக் கைது செய்துள்ளது. மேலும் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், முன் ஜாமின் வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன் தினம் இரவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z கலவரத்தைச் சுட்டிக்காட்டி வன்முறையைத் தூண்டும்விதமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அதை நீக்கவும் செய்திருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா - விஜய்
ஆதவ் அர்ஜுனா - விஜய்

எனினும் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்தநிலையில் அவர்மீது, வடக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் BNS பிரிவுகள் 192 கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டது, 196(1)(b) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயல், 197(1)(d) இந்திய இறையாண்மை, 353(1)(b) ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பது, 353(2) பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் அறிக்கைகள், வதந்திகளைப் பரப்புவது, பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலைப் பகிர்வது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, "என் வாழ்க்கையில் என்னுடைய அம்மாவின் இழப்புக்குப் பிறகு, என்னுடைய 41 குடும்பங்களின் இழப்பு மிகப் பெரிய வலியைக் கொடுத்திருக்கிறது. இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. கூடிய சீக்கிரம் அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திப்போம். அவர்களுடன் மிகப் பெரிய பயணம் தொடரும்" எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.

காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், ... மேலும் பார்க்க

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" - தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமி... மேலும் பார்க்க

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" - தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை - விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க

கரூர்: "விஜய் மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்தத் துயரைத் தடுத்திருக்கலாம்" - செந்தில் பாலாஜி

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீசார்; காரணம் என்ன?

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்துள்ள நிலையில் பாத... மேலும் பார்க்க