செய்திகள் :

காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

post image

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.

இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், இருதரப்பும் சமாதானத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

இதற்காக முதற்கட்டமாக 20 நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. அதே நேரம், காசா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

சரக்கு கப்பல்
சரக்கு கப்பல்

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஏமனின் ஹவுத்திகள் குழு டச்சு வணிகக் கப்பலுக்குத் தீ வைத்திருக்கிறது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைக்கக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும், கருவிகளையும் பயன்படுத்துவோம் என எச்சரித்திருக்கிறது.

இது ஏடன் வளைகுடாவில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுத்திகள் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலாகும். 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா இடையே போர் தொடங்கியது.

அதற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 2023 முதல் ஹவுத்திகள் இஸ்ரேல், அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்து வருகின்றனர். 2023 முதல் இப்போது வரை நான்கு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து ஹவுத்தி ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ``மினர்வாக்ராட்டைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கப்பல் ஏவுகணையை ஹவுத்திகள் ஏவினர்.

இந்தத் தாக்குதலில் மினர்வாகிராட் கப்பலிலிருந்த 19 பேரில் 2 கடற்படையினர் காயமடைந்தனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சரக்கு கப்பல்
சரக்கு கப்பல்

காசாவில் நடந்த போருக்குப் பதிலளிக்கும் விதமாக ஹவுத்திகள் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீதும் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

செங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹவுத்திகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதை மீறிச் செயல்படுவதாகக் குறிப்பிடும் ஹவுத்திகள் தாக்குதலில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Bihar SIR: ``65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியானது

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது.இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி... மேலும் பார்க்க

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" - தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமி... மேலும் பார்க்க

கரூர் நெரிசல்: 'கலவரத்தை ஏற்படுத்து நோக்கத்துடன்' - ஆதவ் அர்ஜுனா மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.இந்தச்... மேலும் பார்க்க

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" - தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை - விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க

கரூர்: "விஜய் மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்தத் துயரைத் தடுத்திருக்கலாம்" - செந்தில் பாலாஜி

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க