செய்திகள் :

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

post image

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில், துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவி வகிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனவும், டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் எனவும் அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வரும் நவம்பர் மாதம் இரண்டரை ஆண்டுகளை நிறைவுச் செய்யும் நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஹெச்.டி. ரங்கநாத் மற்றும் முன்னாள் எம்.பி. எல்.ஆர். சிவராமே கவுடா ஆகியோர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

“அனைவரும் நவம்பர் புரட்சியைக் குறித்து பேசிவருகிறார்கள் 5 ஆண்டுகள் முழுவதும் நான்தான் முதல்வராகப் பதவி வகிப்பேன். ஆனால், உயர் தலைவர்கள் என்ன முடிவு செய்கின்றார்களோ அதன்படியே நாம் நடக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் சித்தராமையா 5 ஆண்டுகள் தனது பதவியை நிறைவு செய்யமாட்டார் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், கடந்த 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சித்தராமையா கர்நாடகத்தின் முதல்வராகப் பதவி விகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

Karnataka Chief Minister Siddaramaiah has stated that he will be the only person to hold the post of Chief Minister for the entire five-year term.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

தில்லியிலுள்ள பள்ளிக் கல்வித் திட்டத்தில் ராஷ்ட்ரநீதி என்ற பெயரில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) பற்றியும் அதன் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை, அவர்கள் ஏற்காத நமது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட... மேலும் பார்க்க

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவிப்பு!

அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத... மேலும் பார்க்க