செய்திகள் :

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

post image

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான பிரம்மானந்தம், கர்ரி நுக்காராஜூ, சிந்தா நாகேஸ்வர ராவ் மற்றும் கொப்படி ஸ்ரீனு ஆகியோர், கடந்த 53 நாள்களுக்கு முன்பு படகு வாங்குவதற்காக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு படகு வாங்கிய பின்பு, அந்தப் புதிய படகிலேயே காக்கிநாடாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, வழி தவறி இலங்கை கடற்பகுதியினுள் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் 4 பேரும் கஞ்சா கடத்தல்காரர்கள் எனச் சந்தேகித்த இலங்கை அதிகாரிகள் அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காக்கிநாடா மக்களவை உறுப்பினர் உதய் ஸ்ரீனிவாஸ், எம்.எல்.ஏ. வனமடி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் ஆந்திர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்களது படகுடன் மீனவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மீனவர்களையும் அவர்களது படகையும், இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று (செப். 30) காக்கிநாடா அழைத்து வந்தனர்.

இதுபற்றி, காக்கிநாடா மக்களவை உறுப்பினர் உதய் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், இந்திய மீனவர்களை படகுடன் இலங்கை அரசு விடுவித்துள்ளது இதுவே முதல்முறை எனவும், இதற்கு முன்பு அவர்கள் சிறைப்பிடிக்கும் மீனவர்களை மட்டுமே விடுவிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?

Four fishermen from Andhra Pradesh, who were released from a prison in Jaffna, Sri Lanka, have returned to Kakinada after 53 days.

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர... மேலும் பார்க்க

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) இன்று காலை அனுமத... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வய... மேலும் பார்க்க

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க