செய்திகள் :

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

post image

மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி செப். 19 ஆம் தேதி மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் உடற்கூராய்வு செய்யப்பட்ட ஸுபீன் கர்லின் உடல், அஸ்ஸாம் கொண்டுவரப்பட்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்துகள் பரவியது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் இரண்டாவது முறையாக உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஸுபீன் கர்க் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவரது மனைவி கரிமா சைகியா கர்க் தெரிவித்தார்.

”ஸுபீன் கர்க்கிற்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. தற்போதும் அவரது மரணம் மர்மமாகவே இருக்கிறது. சிங்கப்பூர் சென்றிருந்தபோது, சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்து அவருக்கு தெரியாது. அவருக்கு தெரிந்திருந்தால் தொலைபேசியில் என்னிடம் பேசும்போது கூறியிருப்பார்.

வலிப்பு நோய்க்காக ஒரே ஒரு மாத்திரை மட்டும்தான் ஸுபீன் எடுத்துக் கொள்கிறார். அவரது மேலாளருக்கும் அது நன்றாக தெரியும். அவர் நீந்த முடியாத நிலையில் இருந்தபோதும் ஏன் அவரைத் தண்ணீரிலிருந்து தூக்கவில்லை? அவருக்கு வலிப்பு நோய் இருப்பதால் தண்ணீர் அல்லது நெருப்பின் அருகில் செல்லக் கூடாது என்பது அவரின் மேலாளருக்கும் தெரியும்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தில்லி குருகிராமில் வைத்து ஸுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மாவையும், விமான நிலையத்தில் வைத்து சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தாவையும் அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் புதன்கிழமை காலை தில்லியில் இருந்து குவஹாத்தி அழைத்துவரப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Assam Police have arrested the manager and Singaporean event organizer of late singer Zubeen Garg.

இதையும் படிக்க : பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

நமது நிருபர்புது தில்லி, செப்.30: மூத்த பாஜக தலைவரும் தில்லி பாஜகவின் முதல் தலைவருமான வி.கே. மல்ஹோத்ரா (93) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தில்லியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட 8% கூடுதலாக மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம்

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 4 மாத பருவமழைக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவா்... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு

நமது நிருபர்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோர... மேலும் பார்க்க

மிதமாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விமானப் பயணங்களின் எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மிதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவ... மேலும் பார்க்க