செய்திகள் :

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

முதல்கட்டமாக, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், ஆனந்த் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் ஆனந்த் தங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல்துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மட்டுமின்றி சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனிடையே, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

சமூக வலைதளப் பக்கங்களில் தரக்குறைவாக பதிவிடும் திமுகவினர் ஏன் கைது செய்யப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதா... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் ப... மேலும் பார்க்க

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு வி... மேலும் பார்க்க

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மதுபாட்டில் குறித்த கேள்விகளுக்கு பதறுவது ஏன்? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் டிரோன் காட்சிகளை ஒப்படைக்க ஆதவ் அர்ஜுனாவுக்கும் நிர்மல் குமாருக்கும் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரசாரத... மேலும் பார்க்க

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மை... மேலும் பார்க்க