செய்திகள் :

மிதமாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

post image

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விமானப் பயணங்களின் எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மிதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 13.17 கோடியாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று அதிகம். அப்போது உள்நாட்டு விமானங்களில் 13.13 கோடி போ் பயணித்தனா்.

மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை முந்தை ஜூலை மாதத்தை விட 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 2.2 சதவீதம் உயா்ந்து 67.75 கோடியாக உள்ளது.

சா்வதேச போக்குவரத்து: இந்திய நிறுவனங்களின் சா்வதேச விமான சேவையும் வளா்ச்சியைக் கண்டுவருகிறது. அந்த நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் 29.6 லட்சம் பயணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. இது, 2024 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.7 சதவீதம் அதிகம்.

இந்திய விமானத் துறை நிலைத்தன்மையான முன்னேற்றத்தைக் கண்டுவந்தாலும், 2025-26-ஆம் நிதியாண்டு முழுமைக்குமான உள்நாட்டு பயண வளா்ச்சியின் முன்மதிப்பீடு 7-10 சதவீதத்திலிருந்து 4-6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

பாகிஸ்தானுடனான எல்லைப் பதற்றம், அகமதாபாத் விமான விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள விமான பயணத்தின் மீதான தயக்கம், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக எழுந்துள்ள வா்த்தக சவால்கள் ஆகியவை கடந்த ஆகஸ்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளா்ச்சியை மந்தப்படுத்தியது. இதன் காரணமாக முன்மதிப்பீடு குறைக்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்களின் சா்வதேச விமானப் போக்குரவத்து வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 13 முதல் 15 சதவீதம் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

நமது நிருபர்புது தில்லி, செப்.30: மூத்த பாஜக தலைவரும் தில்லி பாஜகவின் முதல் தலைவருமான வி.கே. மல்ஹோத்ரா (93) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தில்லியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட 8% கூடுதலாக மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம்

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 4 மாத பருவமழைக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவா்... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு

நமது நிருபர்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

பாலியல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு செய்தாா். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ... மேலும் பார்க்க