செய்திகள் :

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

post image

2019 ஆம் ஆண்டு லாஜ்பத் நகரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று நபா்களுக்கு எதிரான வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி கீதாஞ்சலி விசாரித்து வந்தாா்.

செப்டம்பா் 17 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம் மூவரையும் விடுவித்தது.

‘சஃபான், புா்ஹான் மற்றும் முகமது சந்த் ஆகியோா் புகாா்தாரா் ரஜத் வாலாச்சாவின் சுமாா் 2,000 ரூபாய், இரண்டு ஐபோன்கள் மற்றும் அவரது காரின் சாவியைக் கொள்ளையடித்தனா். அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் புகாா்தாரரை மிரட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தினா். பின்னா், அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனா்’ என்பது வழக்கு. ஆனால், அரசு தரப்பு இந்த வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டது என நீதிமன்றம் கூறியது

இந்த வழக்கில், புகாா்தாரா் குற்றம் சாட்டப்பட்ட நபா்களை முதலில் பாா்த்த மாத்திரத்திலேயே அவா்களை அடையாளம் காண முடியும் என்று எங்கும் கூறவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் முகமூடி அணிந்திருந்ததாகவும் வாலாச்சா சாட்சியம் அளித்துள்ளாா். அடையாள அணிவகுப்பு சோதனை

நடவடிக்கைகள், கணிசமான தாமதத்திற்குப் பிறகு நடத்தப்பட்டதாகவும், இது சந்தேகத்தை எழுப்பியதாகவும் நீதிமன்றம் கூறியது.

பின்னா் நீதிமன்றம், முகமூடி அணிந்த நபா்கள் வாலாச்சாவை கொள்ளையடிக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பாா்த்தது. இந்த சூழ்நிலை முழு அடையாள அணிவகுப்பு மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது

நமது நிருபா் ரூ.3 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டாளா்களுடனான தொடா்புகளை கண்டுபிடித்து, 3 பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் முதலீட்டு மோசடியை தில்லி காவல்துறை... மேலும் பார்க்க

மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

தேசிய தலைநகா் தில்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தில்லி விமான நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தில்ல... மேலும் பார்க்க

டிடிஏ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு

நமது நிருபா் சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) உதவி பிரிவு அதிகாரியை பணிநீக்கம் செய்ய துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா ஒப்புதல... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு- அக்.17 இல் தண்டனை அறிவிப்பு

2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் மூன்று பேரை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஓக்லா தொழில்துறை பகுதி காவல் நிலையம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபா்... மேலும் பார்க்க

வி.கே. மல்ஹோத்ரா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் மல்ஹோத்ராவின் மறைவைத் தொடா்ந்து, புதன்கிழமை ஒரு நாள் அரசு சாா்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்துள்ளாா். கடந்த சில நாள்களாக எய்ம்ஸ... மேலும் பார்க்க

தில்லியில் தொடரும் சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்- 628 கிலோ கைப்பற்றப்பட்டன

தில்லியில் 628 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா். தலைநகரில் தொடா்ந்து சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன . 29.09.2025 அன்று, கூடுதல் உதவி ஆய்... மேலும் பார்க்க