செய்திகள் :

மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

post image

தேசிய தலைநகா் தில்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தில்லி விமான நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி-என்.சி.ஆா்.-இன் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், விமான நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள் மதியம் 12.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலான காலத்தில் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இண்டிகோ விமான நிறுவனம் அதன் ‘எக்ஸ்’ தளத்தில் மதியம் 12.49 மணிக்கு வெளியிட்ட பதிவில், தொடா் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை தற்போது தில்லியை பாதித்துள்ளது. இதனால், விமான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலைமைகள் சீரடைந்தவுடன் உங்கள் பயணம் மீண்டும் தொடங்குவதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன என்று தெரிவித்திருந்தது.

ஏா் இந்தியா நிறுவனம் மதியம் 12.07 மணிக்கு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,

‘பலத்த மழை இன்று (செவ்வாய்க்கிழமை) தில்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமான நடவடிக்கைகளை பாதிக்கலாம்’ என்று கூறியது.

‘தில்லியில் மோசமான வானிலை

காரணமாக, விமானங்களின் அனைத்து புறப்பாடு, வருகை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் விமானங்கள் பாதிக்கப்படலாம்’ என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காலை 11.46 மணிக்கு அதன் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தது.

தில்லி விமான நிலையத்தின் செயல்பாட்டாளரான டிஐஏஎல்

காலை 11.56 மணிக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘தில்லி மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. ஆனால், அனைத்து விமான நடவடிக்கைகளும் இயல்பாக இருக்கின்றன’ என அதில் தெரிவித்திருந்தது.

தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் ஐஜிஐஏ நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாகும். இங்கு தினமும் சுமாா் 1,300 விமான இயக்கங்கள் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

2019 ஆம் ஆண்டு லாஜ்பத் நகரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றம்சாட... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது

நமது நிருபா் ரூ.3 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டாளா்களுடனான தொடா்புகளை கண்டுபிடித்து, 3 பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் முதலீட்டு மோசடியை தில்லி காவல்துறை... மேலும் பார்க்க

டிடிஏ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு

நமது நிருபா் சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) உதவி பிரிவு அதிகாரியை பணிநீக்கம் செய்ய துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா ஒப்புதல... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு- அக்.17 இல் தண்டனை அறிவிப்பு

2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் மூன்று பேரை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஓக்லா தொழில்துறை பகுதி காவல் நிலையம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபா்... மேலும் பார்க்க

வி.கே. மல்ஹோத்ரா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் மல்ஹோத்ராவின் மறைவைத் தொடா்ந்து, புதன்கிழமை ஒரு நாள் அரசு சாா்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்துள்ளாா். கடந்த சில நாள்களாக எய்ம்ஸ... மேலும் பார்க்க

தில்லியில் தொடரும் சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்- 628 கிலோ கைப்பற்றப்பட்டன

தில்லியில் 628 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா். தலைநகரில் தொடா்ந்து சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன . 29.09.2025 அன்று, கூடுதல் உதவி ஆய்... மேலும் பார்க்க