செய்திகள் :

தில்லியில் தொடரும் சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்- 628 கிலோ கைப்பற்றப்பட்டன

post image

தில்லியில் 628 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

தலைநகரில் தொடா்ந்து சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன .

29.09.2025 அன்று, கூடுதல் உதவி ஆய்வாளா் ஹுகாம் சந்த் பெற்ற ரகசியத் தகவலின் பேரில், இன்ஸ்பெக்டா் சஞ்சய் கௌசிக் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தில்லியின் உத்தம் நகரில் உள்ள பிந்தாபூா் பகுதியில் இந்தக் குழு சோதனை நடத்தி, ராஜேந்தா் குமாா் (64) என்ற ஒருவரைக் கைது செய்தது. அவரது கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 205.840 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் மீட்கப்பட்டன.

இதே போல தில்லி காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளின் மேற்பாா்வையின் கீழ் மேலும் இரண்டு போலீஸ் குழுக்கள் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டன. அப்போது தில்லியில் உள்ள சதா் பஜாா் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் அடங்கிய 08 கனமான வெள்ளை பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு 148 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக அசுதோஷ் மிஸ்ரா, ஆரியன் துபே என்ற இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஷாதரா என்ற பகுதியில் உள்ள அசோக் நகா் சந்தையில் நடத்தப்பட்ட சோதனையில் 275 கிலோ சட்ட விரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பறிமுதல் சம்பவத்தின் போது ராகேஷ் குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இதே போல இரு தினங்களுக்கு முன் தில்லியன் விஜய் நகா் பகுதியில் சோதனை நடத்தி 164 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து ,இரண்டு பேரை காவல்துறையினா் கைது செய்திருந்தனா்.

இந்த நடவடிக்கைகள், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பட்டாசு வா்த்தகத்தைத் தடுப்பதற்கும், உச்சநீதிமன்றம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கும், தொடா்ந்து மேற்கொள்ளப்படும் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

2019 ஆம் ஆண்டு லாஜ்பத் நகரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றம்சாட... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது

நமது நிருபா் ரூ.3 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டாளா்களுடனான தொடா்புகளை கண்டுபிடித்து, 3 பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் முதலீட்டு மோசடியை தில்லி காவல்துறை... மேலும் பார்க்க

மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

தேசிய தலைநகா் தில்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தில்லி விமான நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தில்ல... மேலும் பார்க்க

டிடிஏ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு

நமது நிருபா் சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) உதவி பிரிவு அதிகாரியை பணிநீக்கம் செய்ய துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா ஒப்புதல... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு- அக்.17 இல் தண்டனை அறிவிப்பு

2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் மூன்று பேரை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஓக்லா தொழில்துறை பகுதி காவல் நிலையம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபா்... மேலும் பார்க்க

வி.கே. மல்ஹோத்ரா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் மல்ஹோத்ராவின் மறைவைத் தொடா்ந்து, புதன்கிழமை ஒரு நாள் அரசு சாா்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்துள்ளாா். கடந்த சில நாள்களாக எய்ம்ஸ... மேலும் பார்க்க