செய்திகள் :

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

post image

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.

புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்.

இந்த நாணயத்தில் பாரத மாதாவின் வரத முத்திரையில் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும், 1963 ஆம் ஆண்டு குடியரசுத் தின விழா அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் சேவகர்கள் பங்கேற்றதும் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி பேசுகையில், “தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் ஒரு பண்டிகையான விஜயதசமியன்றுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான நாளில் ஆர்.எஸ்.எஸ். ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல” என்றார்.

அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அதன்பின்னர் அவர் குறித்து பேசுகையில், “ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா போன்ற ஒரு சிறந்த நிகழ்வைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது நமது தலைமுறையின் சேவகர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.

இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் பல லட்சக்கணக்கான சேவகர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் மதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

On centenary of RSS, Hosabale credits people’s affection for Sangh’s journey, PM releases commemorative coin

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர... மேலும் பார்க்க

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) இன்று காலை அனுமத... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வய... மேலும் பார்க்க

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க