செய்திகள் :

அமெரிக்கா: குழந்தைகளுக்குப் பெயர் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்; பின்னணி என்ன?

post image

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதையே ஒரு தொழிலாக மாற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டெய்லர் ஏ. ஹம்ப்ரி. இவர் தன்னை ஒரு 'குழந்தைகளுக்கான பெயர் ஆலோசகர்' (Baby Name Consultant) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

குழந்தைகளுக்குப் பொருத்தமான மற்றும் தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே இவரது தொழிலாக உள்ளது. இதற்காக இவர் 30,000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கிறார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.

Baby
Baby (Representational Image)

ஆர்வத்தில் தொடங்கிய தொழில்

சிறு வயதிலிருந்தே பெயர்கள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறும் ஹம்ப்ரி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இது குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.

ஒருமுறை, மருத்துவமனையிலிருந்து ஒரு தாய் அவரைத் தொடர்புகொண்டு, 'குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டால்தான் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியும், உடனடியாக ஒரு பெயர் வேண்டும்' என்று கேட்டுள்ளார்.

இந்தச் சம்பவமே, தனது ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றும் எண்ணத்தை ஹம்ப்ரிக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் பெயர் சூட்டியுள்ளார். இவரது சேவைகள் 200 டாலர்களில் (சுமார் ரூ.16,000) இருந்து தொடங்குகின்றன.

இந்தத் தொகையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சில பெயர்ப் பட்டியல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார். பிரத்யேக விஐபி பேக்கேஜ்களுக்குக் கட்டணம் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை செல்கிறது.

பெற்றோரின் விருப்பங்கள் மற்றும் குடும்பப் பின்னணியை அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம் ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் பெயர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

பெயர்ப் பட்டியல்கள் வழங்குவதோடு, பெயர் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தம்பதியினருக்குள் ஏற்படும் பெயர் குறித்த கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்வது போன்ற சேவைகளையும் இவர் வழங்குகிறார்.

அமெரிக்காவில் இந்தத் தொழில் தற்போது பிரபலமடைந்து வருவதாகவும், ஹம்ப்ரியைப் போலவே பலரும் குழந்தை பெயர் ஆலோசகர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்று மனைவி இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்த முதியவர் தனது 75 வயதில் தனக்கு துணை தேவை என்று 35 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - கயிற்றால் கட்டி, வனத்துறையிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்!

நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைபெண்கள் சில நேரங்களில் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பவர். எதாவது ஆபத்து வரும் போதுதான் அவர்களின் துணிச்சல் வெளியில் தெரிய வரும். பல பெண்கள்... மேலும் பார்க்க

குஜராத்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக ஏரியில் குதித்த வாலிபர்கள்; விபரீதத்தில் முடிந்த தற்கொலை நாடகம்

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகில் உள்ள நர்திபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது. தற்போது தசரா என்பதால் நள்ளிரவு வரை தாண்டியா நடனம் நடை... மேலும் பார்க்க

சென்னை: தி.நகரில் 1.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் திறப்பு; பயணிகள் வரவேற்பு | Photo Album

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்! மேலும் பார்க்க

காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்... மேலும் பார்க்க

கூட்டத்தை விட்டு எப்போது வெளியேற வேண்டும்? - அபாயத்தைத் தவிர்க்க, உயிர் காக்கும் எச்சரிக்கைகள்!

கரூர் சம்பவத்தையொட்டி, தவெக தலைவர் விஜய்யை ஆரம்பித்து, ஆளும் கட்சியினரை, வேடிக்கைப் பார்க்கச் சென்ற மக்களை என அனைவரையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்த சம்பவத்தில் இருந்து ந... மேலும் பார்க்க