செய்திகள் :

குஜராத்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக ஏரியில் குதித்த வாலிபர்கள்; விபரீதத்தில் முடிந்த தற்கொலை நாடகம்

post image

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகில் உள்ள நர்திபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது. தற்போது தசரா என்பதால் நள்ளிரவு வரை தாண்டியா நடனம் நடைபெறுவது வழக்கம்.

இரவு 10.30 மணிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த யாஷ் மாலி என்பவர் தாண்டியா பார்த்துக்கொண்டிருந்தபோது அவருடன் இருந்த நண்பருக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வந்தது.

வீடியோவில் மூவர்

அந்த வீடியோவில் யாஷ் மாலியின் சகோதரர் உட்பட 3 வாலிபர்கள் அங்குள்ள ஏரியில் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வது தொடர்பாகப் பேசிக்கொண்ட காட்சி இடம் பெற்றிருந்தது.

அந்த நபர் யாஷ் மாலியிடம் அந்த வீடியோ குறித்துத் தெரிவித்தார். அந்த வீடியோவை யாஷ்மாலி பார்த்துவிட்டு உடனே அங்குள்ள ஏரிக்கு விரைந்து சென்றார்.

வீடியோவில் பேசும் தைரிய மாலி
வீடியோவில் பேசும் தைரிய மாலி

ஏரிக்கரையில் இரண்டு மொபைல் போன், காலனி, பர்ஸ், இரு சக்கர வாகன சாவி மற்றும் இரு சக்கர வாகனம் இருந்தது. உடனே அந்த ஏரியில் இரவோடு இரவாகத் தேடிப் பார்த்தபோது 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இறந்து கிடந்தனர். அவர்களது பெயர் முறையே தைரிய மாலி(21), கெளஷிக்(23), அசோக்(39) என்று தெரிய வந்தது.

அவர்களது மொபைல் போனில் இருந்து மூவரும் இன்ஸ்டாகிராம் வீடியோவிற்காக தற்கொலை வீடியோவைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஏரியில் குதிப்பதைத் தாங்களே வீடியோ எடுக்க முயன்றதாகத் தெரிகிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மூன்று பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோவிற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஏரியில் குதிக்கும் வீடியோவைப் பகிர்ந்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

அவர்கள் மூவரையும் வேறு யாராவது தற்கொலைக்குத் தூண்டினார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

வீடியோவில் 3 பேரும் தங்களது வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பேசிக்கொண்ட காட்சிப் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி இருக்கிறது.

சென்னை: தி.நகரில் 1.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் திறப்பு; பயணிகள் வரவேற்பு | Photo Album

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்! மேலும் பார்க்க

காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்... மேலும் பார்க்க

கூட்டத்தை விட்டு எப்போது வெளியேற வேண்டும்? - அபாயத்தைத் தவிர்க்க, உயிர் காக்கும் எச்சரிக்கைகள்!

கரூர் சம்பவத்தையொட்டி, தவெக தலைவர் விஜய்யை ஆரம்பித்து, ஆளும் கட்சியினரை, வேடிக்கைப் பார்க்கச் சென்ற மக்களை என அனைவரையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்த சம்பவத்தில் இருந்து ந... மேலும் பார்க்க

54 மணிநேரம் உயிர் போராட்டம்; கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண் பிழைத்தது எப்படி?

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சவுத் சைன... மேலும் பார்க்க

நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்

இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.சிக்கனமான வாழ்க்கை ... மேலும் பார்க்க

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்

மதுரை, செப்டம்பர் 28, 2025: சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு பகுதியாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை ‘வெற்றி ஓட்ட மாரத்தான்’என்ற நிகழ்வை ... மேலும் பார்க்க