செய்திகள் :

காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அங்கு அவர்கள் கடுமையான நிலைமைகளின் கீழ் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் சீனாவில் 'தடுப்பூசி பாஸ்போர்ட்' காலாவதியானதால், ஒரு சிறுவன் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோவில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள அந்தச் சிறுவனுக்கு, சுகாதாரப் பணியாளர் ஒருவர் சீல் வைக்கப்பட்ட ஒரு சிறிய கதவு வழியாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

vaccine passport

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் 'டிஜிட்டல் ஹெல்த் ஐடி' எனப்படும் தடுப்பூசி பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களின் நடமாட்டத்தையும், தடுப்பூசி நிலையையும் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டது.

தடுப்பூசி சான்றிதழ்கள் காலாவதியானவர்கள் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் தங்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனர்கள் எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்றால் என்ன?

சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது அந்நாட்டு குடிமக்களின் தடுப்பூசி நிலை மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை ஆகும்.

இது 'விசாட்' (WeChat) என்ற சமூக ஊடக தளம் மூலம் கிடைக்கிறது. காகித வடிவிலும் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இது சீன குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: தி.நகரில் 1.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் திறப்பு; பயணிகள் வரவேற்பு | Photo Album

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்! மேலும் பார்க்க

கூட்டத்தை விட்டு எப்போது வெளியேற வேண்டும்? - அபாயத்தைத் தவிர்க்க, உயிர் காக்கும் எச்சரிக்கைகள்!

கரூர் சம்பவத்தையொட்டி, தவெக தலைவர் விஜய்யை ஆரம்பித்து, ஆளும் கட்சியினரை, வேடிக்கைப் பார்க்கச் சென்ற மக்களை என அனைவரையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்த சம்பவத்தில் இருந்து ந... மேலும் பார்க்க

54 மணிநேரம் உயிர் போராட்டம்; கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண் பிழைத்தது எப்படி?

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சவுத் சைன... மேலும் பார்க்க

நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்

இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.சிக்கனமான வாழ்க்கை ... மேலும் பார்க்க

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்

மதுரை, செப்டம்பர் 28, 2025: சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு பகுதியாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை ‘வெற்றி ஓட்ட மாரத்தான்’என்ற நிகழ்வை ... மேலும் பார்க்க

BSNL: நாடு முழுவதும் 92,000 இடங்களில் BSNL 4G இணைய சேவை துவக்கம் - தொழில்நுட்ப சிறப்புகள் என்ன?

நாட்டில் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய 3 தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிறுவனங்கள் படிப்படியாகத் தங்களது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் 99 ரூபாய்க்கு ... மேலும் பார்க்க