செய்திகள் :

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

post image

தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தென்மேற்கு பருவமழை இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “புள்ளிவிவரப்படி தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் பெய்யும் மழையானது வடகிழக்கு பருவமழையில்தான் சேரும். 2023, 2024-க்குப் பிறகு சென்னைக்கு அற்பதமான ஆண்டு.

மீனம்பாக்கம் பகுதியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 362 மி.மீ. மழை பெய்துள்ளது.

தென்சென்னை முழுவதும் மழை பெய்யவில்லை என்று கூற முடியாது. மீனம்பாக்கம்-நங்கநல்லூர்-ஆதம்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை அளவு குறைவாக இருந்தது.

சோழிங்கநல்லூர் போன்ற தென்சென்னையின் பிற பகுதிகளில் மழைப் பொழிவு நன்றாக இருந்தது.

அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர், கொரட்டூர், மணலி போன்ற அனைத்து இடங்களில் தென்மேற்கு பருவமழை சமயத்தில் 800/900 மி.மீ. மழைப் பதிவை கடந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

Tamil Nadu weatherman Pradeep John posted that the southwest monsoon is ending today.

கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

சென்னை: கரூரில், சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் திடீரென கூட்டம் அதிகரித்தது பற்றி சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம் அளி... மேலும் பார்க்க

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்க... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியா... மேலும் பார்க்க

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக். 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை (அக். 1) ஆயுத பூஜை மற்றும் நாளை மறுந... மேலும் பார்க்க

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று விடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கரூரில், தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மக்கள் சந்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை, அவரது சகோதரி கண்முன்னே, இரண்டு காவலர்கள் பாலியியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்... மேலும் பார்க்க