செய்திகள் :

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

post image

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயரின் விவரங்களை, தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சரிபார்க்கலாம் என்று பிகார் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு பிகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் அண்மையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பிகாரில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2003-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, தற்போது திருத்தப் பணிகள் நடைபெற்றன.

அதன்படி, 2003-க்கு முன்பு பிகாரில் வாக்காளா்களாகப் பதிவு செய்தவர்கள் (சுமாா் 60%), கூடுதல் ஆவணம் எதையும் சமர்ப்பிக்காமல், வாக்காளர்களாகத் தொடர அனுமதிக்கப்பட்டனர். 2003-க்குப் பிறகு பதிவு செய்தவர்கள் (சுமாா் 40%), கடவுச் சீட்டு, பிறப்புச் சான்று, ஆதாா் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாடு முழுவதும் இப்பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் 2002-இல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

The Election Commission of India has released the final voter list based on the special revision of the Bihar voter list.

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனிக்காக முன்னுரை எழுதிய மோடி!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைப் புத்தகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐயம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை பிரின்ஸிபிள்ஸ்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநி... மேலும் பார்க்க

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடி... மேலும் பார்க்க

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆ... மேலும் பார்க்க