செய்திகள் :

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

post image

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி மிகப் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்தச் சம்பவத்தில், 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், சேதமடைந்த கட்டமைப்புகளின் மறுசீரமைப்புக்கும், மத்திய அரசு ரு.260.65 கோடி நிதியுதவி வழங்க அனுமதித்துள்ள நிலையில், இதுவரையில் அந்த நிதி மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை என கேரள சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று (செப். 30) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய முதல்வர் விஜயன் கூறியதாவது:

“மாநில அரசு மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்புக்கு ரூ.2,262 கோடி மத்திய அரசிடம் கோரியது. பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் உரையாடினர்.

இந்த நிலையில், மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்கு ரூ.260.65 கோடி நிதியை ஒதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அந்தத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.

இத்துடன், வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டுமெனவும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டுமெனவும், முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Kerala Chief Minister Pinarayi Vijayan has said that the Rs 260 crore financial assistance allocated by the central government for the Wayanad landslide has not yet been released.

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநி... மேலும் பார்க்க

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடி... மேலும் பார்க்க

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பைய... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

தில்லியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வரும் அக்டோர்... மேலும் பார்க்க

காந்தியும் மோடியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்!லண்டனில் காந்தி சிலை மீது பெயிண்ட் வீச்சு!

லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.மேலும், காந்தி சிலை மீது வெள்ளை நிற பெயிண்ட்டும் வீசப்பட்டுள... மேலும் பார்க்க