செய்திகள் :

காந்தியும் மோடியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்!லண்டனில் காந்தி சிலை மீது பெயிண்ட் வீச்சு!

post image

லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.

மேலும், காந்தி சிலை மீது வெள்ளை நிற பெயிண்ட்டும் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி, சட்ட மாணவராக படித்ததை போற்றும் வகையில், டேவிஸ்டாக் சதுக்கத்தில் 1968 ஆம் ஆண்டு காந்தியின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அவையால், காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுப்படுவது வழக்கம்.

இதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.

சேதப்படுத்தப்பட்ட சிலை

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:

"லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலை இந்திய தூதரகம் வன்மையாக கண்டிக்கிறது. இது வெறும் சதியல்ல, சர்வதேச அகிம்சை தினத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு, அகிம்சை கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான தாக்குதலாகும்.

உள்ளூர் அதிகாரிகளுடன் உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலையை மீண்டெடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’Gandhi and Modi are Hindustani terrorists’ : Paint thrown on Gandhi statue in London

இதையும் படிக்க : பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பைய... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

தில்லியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வரும் அக்டோர்... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க