செய்திகள் :

கரூர் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

post image

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை, பாஜக வெளிப்படையாகத் தொடங்கிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை திங்கள்கிழமை அமைத்தார்.

இது தொடர்பாக தொல். திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.

இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

எனவே, ராகுல் காந்தி, இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

vidudhalai siruthaigal Thirumavalavan has criticized the BJP for openly starting its political game in the Karur tragedy.

திருவள்ளூர் உள்பட 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று (30-09-2025), வடக்கு அந்... மேலும் பார்க்க

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் 41 பேர் பலிய... மேலும் பார்க்க

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்ல... மேலும் பார்க்க

கரூரில் கே.சி. வேணுகோபால்! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ந... மேலும் பார்க்க

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன்

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக... மேலும் பார்க்க

கரூரில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு!

கரூரில் கூட்டநெரிசல் பலி குறித்து ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் ப... மேலும் பார்க்க