செய்திகள் :

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

post image

தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் 41 பேர் பலியான பிறகு, கடந்த மூன்று நாள்களாக தவெகவின் மூத்த நிர்வாகிகள் யாரும் செய்தியாளர்களை சந்திக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் வீட்டைவிட்டு வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியவுடன், தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை, புரிந்துகொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கபட்ட மக்களை விரைவில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி எனக் குறிப்பிட்டு, நேற்று நள்ளிரவு ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, அதனை சற்றுநேரத்தில் நீக்கிவிட்டார்.

இதனிடையே, கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Not in a situation to talk: TVK Adhav Arjuna

இதையும் படிக்க : பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

சென்னை: கரூரில், சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் திடீரென கூட்டம் அதிகரித்தது பற்றி சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம் அளி... மேலும் பார்க்க

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்க... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியா... மேலும் பார்க்க

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக். 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை (அக். 1) ஆயுத பூஜை மற்றும் நாளை மறுந... மேலும் பார்க்க

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று விடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கரூரில், தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மக்கள் சந்... மேலும் பார்க்க