செய்திகள் :

இத்தாலி பிரதமர் மெலோனிக்காக முன்னுரை எழுதிய மோடி!

post image

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைப் புத்தகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐயம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை பிரின்ஸிபிள்ஸ்” புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிலையில், இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ள பிரதமர் மோடி, ‘இது வெறும் சுயசரிதை மட்டுமல்ல, மெலோனியின் மான் கி பாத்’ எனக் கூறியுள்ளார்.

மெலோனியின் சுயசரிதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

“மெலோனியின் வாழ்க்கை; அரசியல், அதிகாரத்தை விட, அவரது தைரியம், பொது சேவை மற்றும் இத்தாலி மக்கள் மீதான அர்ப்பணிப்பு குறித்தது. கடந்த 11 ஆண்டுகளில் எனக்கு பல்வேறு உலகத் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில நேரங்களில் அவர்களது கதைகள், கலாசாரங்கள் மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்த கொள்கைகளை நினைவூட்டுகின்றன.

அதுபோல், பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் பல முக்கிய தருணங்கள் உள்ளன. அதனால், இந்தப் புத்தகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரது பயணம் ஊக்கமளிப்பதுடன் வரலாற்றுச் சிறப்புள்ளது.

பிரதமர் மெலோனியின் கதைக்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய மரபுகளில் பல வடிவங்களில் போற்றப்படும் தெய்வீக பெண் சக்தியான நாரி சக்தியின் கருத்துக்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளதைக் காண முடிகிறது.

இந்த முன்னுரையை எழுதுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இது வெறும் சுயசரிதை அல்ல; இது அவரது மான் கி பாத்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

Prime Minister Narendra Modi has written the foreword to the autobiography of Italian Prime Minister Giorgia Meloni.

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க... மேலும் பார்க்க

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயரின் விவரங்களை, தேர்தல் ஆணைய இணைய ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநி... மேலும் பார்க்க

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடி... மேலும் பார்க்க

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆ... மேலும் பார்க்க