செய்திகள் :

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

post image

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டத்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

கடந்த 1925 ஆம் ஆண்டு, மறைந்த கே.பி. ஹெட்கேவரினால் நாக்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியை துணை வேந்தர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தின் முக்கிய வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கல்வி நிலையத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதம் சார்ந்த அமைப்புகளின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிக்க |பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

RSS program in Rajasthan University premises NSUI held a protest

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயரின் விவரங்களை, தேர்தல் ஆணைய இணைய ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனிக்காக முன்னுரை எழுதிய மோடி!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைப் புத்தகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐயம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை பிரின்ஸிபிள்ஸ்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநி... மேலும் பார்க்க

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடி... மேலும் பார்க்க

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆ... மேலும் பார்க்க