செய்திகள் :

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

post image

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சைதன்யானந்த் சரஸ்வதியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதோடு, புகார் கொடுத்தவரை, வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக, சைதன்யானந்த் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சைதன்யானந்த், தனியார் கல்வி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது அலுவலகம், வாழும் இடம் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்டினார். அங்கிருந்து பல தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதே வளாகத்தில், மாணவிகளை டார்ச்சர் செய்ய பயன்படுத்திய அறை ஒன்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரது செல்போன் பாஸ்வார்டை கேட்டதற்கு, தான் மறந்துவிட்டதாகவும், பதற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மாணவிகளை தொடர்புகொள்ள இந்த செல்போனை பயன்படுத்தியிருந்ததும், கல்வி மைய வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர் தலைமறைவாக இருந்தபோதும் தன்னுடைய செல்போனில் நேரடியாக கண்காணித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி பிரதமர் மெலோனிக்காக முன்னுரை எழுதிய மோடி!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைப் புத்தகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐயம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை பிரின்ஸிபிள்ஸ்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநி... மேலும் பார்க்க

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பைய... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

தில்லியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வரும் அக்டோர்... மேலும் பார்க்க