செய்திகள் :

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

post image

பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் செவ்வாய்க்கிழமை 10 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுவதாக பலூசிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் நான்கு துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான ஃப்ரண்டியர் கார்ப்ஸின் தலைமையகம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காரில் வந்த 6 பயங்கரவாதிகள், ஃப்ரண்டியர் கார்ப்ஸ் தலைமையகத்துக்கு உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்திய நிலையில், காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கார் வெடிகுண்டு தாக்குதலால், சில கிலோ மீட்டர் தூரத்துக்கு பயங்கர அதிர்வு ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த கார்கள், வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளது.

இந்த தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும், பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் குவெட்டா அருகேவுள்ள மைதானத்துக்கு வெளியே, அரசியல் கட்சியினர் நடத்திய பேரணியின் மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்து 13 பேரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Bomb attack targeting Pakistani paramilitary headquarters; 10 killed.

இதையும் படிக்க : கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இருந்து 400 ஈரான் நாட்டினர் வெளியேற்றம்!

அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய ஈரான் நாட்டைச் சேர்ந்த 120 பேர் விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் வெளிநாட்டினரு... மேலும் பார்க்க

காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

காஸாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தில், பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள... மேலும் பார்க்க

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 போ் உயிரிழப்பு

கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்: அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர போராட்டம்! பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம்! 2 போ் உயிரிழப்பு

பபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா திங்கள்கிழமை அறிவித்தது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நாதலி டிரோயின் ஆகியோா் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க