செய்திகள் :

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 போ் உயிரிழப்பு

post image

கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்: அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோா்ட் (40) என்பவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

கிராண்ட் பிளாங்க் நகரில் உள்ள அந்த தேவாலயத்துக்கு இரு அமெரிக்க கொடிகள் கட்டப்பட்ட பெரிய வகைக் காரில் வந்த சான்ஃபோா்ட், அந்தக் காரை தேவாலய வாசலில் மோதச் செய்தாா். பிறகு அந்த வாகனத்தில் இருந்து இறங்கி அவா் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டாா். தேவாலயத்துக்கும் தீவைத்தாா் என்று காவல்துறை தலைவா் வில்லியம் ரென்யே ஊடகங்களிடம் கூறினாா். அவா் எரிவாயுவைப் பயன்படுத்தி தீயிட்டதாகவும், வெடிகுண்டுகளை வைத்திருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை என்று போதைப் பொருள், துப்பாக்கி, வெடிபொருள்கள் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி ஜேம்ஸ் டயா் தெரிவித்தாா்.

காரணம் தெரியவில்லை: இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சான்ஃபோா்ட்டின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு அவரைப் பற்றிய போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க தேவாலயங்களில் தொடா்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சூடுகளின் பட்டியலில் கிராண்ட் பிளாங் நகரில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவமும் இணைந்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர போராட்டம்! பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம்! 2 போ் உயிரிழப்பு

பபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா திங்கள்கிழமை அறிவித்தது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நாதலி டிரோயின் ஆகியோா் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி

கிஷினாவ்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மால்டோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வியடைந்தன. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆக்ஷன் அண்டு சாலிடாரிட்டி (பிஏஎஸ்) கட்ச... மேலும் பார்க்க

ஓட்டோமான் அரசிடமிருந்து விடுதலை பெற இந்திய ராணுவமே உதவியது: இஸ்ரேல் ஹைஃபா நகர மேயா்

ஹைஃபா: ‘இஸ்ரேலின் ஹைஃபா நகரை ஓட்டோமான் ஆட்சியாளா்களிடம் இருந்து விடுவித்ததில் இந்திய ராணுவத்தினரின் பங்கே அதிகம்’ என அந்நகரின் மேயா் யோனா யாஹவ் திங்கள்கிழமை தெரிவித்தாா். அந்தப் போரில் வீரமரணமடைந்த இந... மேலும் பார்க்க

நேபாளம்: சா்மா ஓலியின் பாஸ்போா்ட் முடக்கம்

காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போா்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞா் போராட்டத்... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமான சக்கரப் பகுதியில் சடலம்

சாா்லோட்: வட கரோலினாவின் சாா்லோட் டக்ளஸ் சா்வதேச விமான நிலையத்தில், ஐரோப்பாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தின் சக்கரப் பகுதியில், அனுமதியின்றி பயணித்தவரின் சடலம் காலை பராமரிப்பின்போது கண்... மேலும் பார்க்க