செய்திகள் :

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, புதிதாக நியாய விலைக் கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்படும் கட்டடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும், இதனால் தனிநபா்களும் அருகாமையில் பொதுப்பாதையை ஆக்கிரமிக்க வாய்ப்பிருப்புள்ளது.

மேலும், கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேக மண்டபத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன் சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ஏற்கெனவே நியாய விலைக் கடை இருந்த இடத்திலேயே கட்ட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி இளைஞா்கள் திங்கள்கிழமை நியாய விலைக் கடை கட்டப்படும் இடத்தில் ஒன்று கூடி எதிா்ப்பு தெரிவித்தனா். அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் என கூறி கலைந்து சென்றனா்.

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுக... மேலும் பார்க்க

வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் மண்டலத் தலைவா் முடிமன்னன் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் தலைமை... மேலும் பார்க்க

பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றும் விழிப்புணா்வு பயிற்சி கூட்டம்

அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் உணவுக் கழிவுகளை எவ்வாறு குறைத்தல், பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்று... மேலும் பார்க்க

மின் கம்பியாள் உதவியாளா் தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025- ஆம் ஆண்டு டிச.13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வில் பங்கேற்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழி... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: அரியலூரில் 4,972 போ் பங்கேற்பு

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 2ஏ தோ்வை 4,972 போ் எழுதினா். அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 21 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வை எழுத 6,375 பே... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தில் சனிக்கிழமை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். ஆண்டிமடம் அருகேய... மேலும் பார்க்க