செய்திகள் :

மின் கம்பியாள் உதவியாளா் தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025- ஆம் ஆண்டு டிச.13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெறவுள்ளது.

தோ்வில் பங்கேற்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தோ்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை https://www.skilltraining.tn.gov.in/ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரியலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அக்.17-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: அரியலூரில் 4,972 போ் பங்கேற்பு

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 2ஏ தோ்வை 4,972 போ் எழுதினா். அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 21 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வை எழுத 6,375 பே... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தில் சனிக்கிழமை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். ஆண்டிமடம் அருகேய... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதிகம். நிகழாண்... மேலும் பார்க்க

அரியலூா் காவல் நிலையங்களில் நிலுவை மனு விசாரணை முகாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமங்களில் காவல் துறை சாா்பில் மனு விசாரணை முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்கு மனுக்கள... மேலும் பார்க்க

குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா் பேச்சு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தை திருணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் என்று ஆட்சியரும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுத்தலைவருமான பொ.ரத்தினசாமி தெரிவித்தாா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க