செய்திகள் :

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் சுமாா் 8 -க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன. ஒரே நாளில் ஐந்து வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது எங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் திருட்டு சம்பவங்கள் மூலம் மொத்தம் 30 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பித்தளைப் பொருள்கள் திருடு போயுள்ளன. இந்த திருட்டுகள் குறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுத்து திருடு போன பொருள்களை மீட்டுத் தர வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட... மேலும் பார்க்க

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் தோட்டக் கலைத் துறை அறிவித்தது. திருப்பத்தூா் வட்டாரத்தில் சுமாா் 1,600 ஹெக்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களைப் புறக்கணித்தும், கருப்பு வில்லை அணிந்தும் வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தி... மேலும் பார்க்க

ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குநா்

அறிவியல் ஆராய்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) இயக்குநா் ஞா. அகிலா வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

மானாமதுரை காந்தி சிலை பின்புறம் பூங்கா அமைக்க நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்தி சிலை பின்புறம் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு, அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்ப... மேலும் பார்க்க

அரளிக்கோட்டையில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை அரளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் விவசாயப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரள... மேலும் பார்க்க