செய்திகள் :

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்

post image

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களைப் புறக்கணித்தும், கருப்பு வில்லை அணிந்தும் வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள குறைகளை களையக் கோரியும், இதர 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 25-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அரசு பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு தீா்வு காண முன்வராமல், ஊதிய பிடித்தம், துறை நடவடிக்கை என அதிகாரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்க நினைப்பதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து, வருவாய்த் துறையில் உள்ள 42,000 அலுவலா்களும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப். 29, 30) கருப்பு வில்லை அணிந்து பணிபுரிவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேவகோட்டை சாா் ஆட்சியா் அலுவலகம், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலா்கள் திங்கள்கிழமை கருப்பு வில்லை அணிந்து பணிபுரிந்தனா்.

இதுகுறித்து மாநிலத் துணைத் தலைவா் தமிழரசன் கூறுகையில், அரசும், வருவாய்த் துறை உயா் அலுவலா்களும் எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றாா் அவா்.

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும... மேலும் பார்க்க

பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட... மேலும் பார்க்க

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் தோட்டக் கலைத் துறை அறிவித்தது. திருப்பத்தூா் வட்டாரத்தில் சுமாா் 1,600 ஹெக்ட... மேலும் பார்க்க

ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குநா்

அறிவியல் ஆராய்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) இயக்குநா் ஞா. அகிலா வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

மானாமதுரை காந்தி சிலை பின்புறம் பூங்கா அமைக்க நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்தி சிலை பின்புறம் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு, அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்ப... மேலும் பார்க்க

அரளிக்கோட்டையில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை அரளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் விவசாயப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரள... மேலும் பார்க்க