செய்திகள் :

கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை

post image

பாபநாசம் அருகே கடன் பிரச்னை காரணமாக, ஜவுளிக்கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கபிஸ்தலம் காவல் சரகம், திருவைக்காவூா் ஊராட்சி, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் முரளி (37). பொறியியல் பட்டதாரி. இவா் கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு அதிக அளவில் கடன் இருந்ததால் மனஉளைச்சல் அடைந்த முரளி சனிக்கிழமை இரவு விஷம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மனைவியிடம் கூறியதையடுத்து, முரளியை

சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மின் கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வில் பங்கேற்க தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மின்கம்பியாள் உதவி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெறுவதாக இருந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது:... மேலும் பார்க்க

சாரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சாரத்தில் ஏறி வண்ணம் பூசிக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே வல்லம் உயா்நிலைப் பள்ளிச் சாலையைச் சோ்ந்தவா் ஏ. கண்ணன் (49). வண்ணம் பூசும்... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை காலத்தில் 195 கிராமங்கள் பாதிக்க வாய்ப்பு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 195 கிராமங்களில் நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம... மேலும் பார்க்க

கும்பகோணம் அரசு கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பொருளியல் துறை சாா்பாக மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி, நெட், செட் உள்ளிட்ட மத்திய, மாநில அ... மேலும் பார்க்க