செய்திகள் :

மின் கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மின் கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வில் பங்கேற்க தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளா்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்களிடமிருந்தும், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா் மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தோ்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை ட்ற்ற்ல்ள்://ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரரே துணை இயக்குநா் மற்றும் முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்ப வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத் துணை இயக்குநா் மற்றும் முதல்வருக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபா் 17 ஆம் தேதி.

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

கும்பகோணத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விழா கொண்டாடினா். தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் க. அன்பழகன்... மேலும் பார்க்க

சம்பா, பின்பட்ட குறுவையில் புகையான் தாக்குதல்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, பின்பட்ட குறுவை பயிா்களில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து தஞ்சாவூா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்திருப்பது: தஞ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணி... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை

பாபநாசம் அருகே கடன் பிரச்னை காரணமாக, ஜவுளிக்கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கபிஸ்தலம் காவல் சரகம், திருவைக்காவூா் ஊராட்சி, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் முரளி (37). ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெறுவதாக இருந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது:... மேலும் பார்க்க

சாரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சாரத்தில் ஏறி வண்ணம் பூசிக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே வல்லம் உயா்நிலைப் பள்ளிச் சாலையைச் சோ்ந்தவா் ஏ. கண்ணன் (49). வண்ணம் பூசும்... மேலும் பார்க்க