கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்
கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.
கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கும் வகையில் டி.எஸ்.பி. செல்வராஜுக்கு பதிலாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.