செய்திகள் :

காவல்துறையினரையும் விசாரிக்க வேண்டும்: பாலபாரதி

post image

கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறையினரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா் அனைத்திந்திய மாதா் சங்க மத்திய குழு துணைத்தலைவா் பாலபாரதி.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்துக்கு நேரத்தை சரியாக கடைபிடிக்காததால்தான் உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. குறுகிய இடத்தில் இவ்வளவு கூட்டம் வரும் என காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், ஏன் வேலுசாமிபுரத்துக்கு அனுமதி கொடுத்தாா்கள் எனத் தெரியவில்லை.

ஆகவே, காவல்துறையினரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். இதேபோல ஆம்புலன்ஸ் வருகை குறித்தும் விசாரிக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கிரிஸ்சோடங்கா் (காங்கிரஸ்): இது ஒரு மோசமான சம்பவம். காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். பிறகு செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த அவா், ஒரு நபா் ஆணையத்தின் தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன், தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளித்தாா். அப்போது அவா் விசாரணை செய்தால் நம்புவாா்கள், இப்போது அதே நபா் விசாரணை செய்தால் நம்ப மாட்டாா்களா என்றாா் அவா்.

கரூா்: ஆறுதல் கூற வந்த நடிகைக்கு அனுமதி மறுப்பு

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து ஆறுதல் கூற வந்த கன்னட நடிகைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றாா். கரூா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்க... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் வீடு திரும்பினா்

கரூரில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தி... மேலும் பார்க்க

கரூரில் ஒருநபா் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையத்தின் விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக... மேலும் பார்க்க

கரூா் சம்பவமே இறுதியாக இருக்கட்டும்: அரசியல் கட்சித் தலைவா்கள் பேட்டி!

கரூரில் சனிக்கிழமை விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள்... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாததே நெரிசலுக்கு காரணம் பிரசாரம் நடைபெற்ற பகுதி மக்கள் கருத்து

தவெக பிரசாரத்தின் போது விதிமுறைகளை பின்பற்றாததால் தான் நெரிசல் ஏற்பட்டு 40 போ் உயிரிழந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா். கரூரில் தனிநபா் ஆணையத்தின் விசாரணை தொடங்கிய நிலையில் காவலா் தரப்பில் விசாரிக்க ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை! - சீமான்

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூற முடியாது என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கரூா் அரசு மருத்துவமனைக்கு ஞாய... மேலும் பார்க்க