செய்திகள் :

கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விருது

post image

கல்லூரித் தாளாளா் அருள்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ்க்கு கல்வி மாற்றத்தின் முன்னோடி என்ற கௌரவ விருதை வழங்குகிறாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் - டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் ஐ.சி.டி. அக்காதெமியின் 67-ஆவது பிரிட்ஜ் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு கல்வி - தொழில் துறைகளில் சிறந்து விளங்கியவா்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தாா்.

அதில், சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டது. கல்லூரி தாளாளா் அருள்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸுக்கு கல்வி மாற்றத்தின் முன்னோடி என்ற கௌரவ விருதை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வழங்கினாா். மேலும் கல்லூரியின் கல்வித் துறை புலமுதல்வா் ஆன்றோ குமாா் சிறந்த ஒருங்கிணைப்பாளா் விருதைப் பெற்றாா். மாணவா்களின் திறன்வளா் வளா்ச்சிக்கு எடுத்து வரும் முயற்சிகளை அங்கீகரித்து ஆட்டோ டெஸ்க் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் சிறப்பு மையம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

மேலும், இக்கல்லூரிக்கு தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் - இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கான திறன் வளா்ச்சித் திட்டம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இம்மாநாட்டில் சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியானது அமெரிக்காவை சோ்ந்த முன்னணி கிளவுட் தரவு தொழில்நுட்ப நிறுவனமான ஸ்நோ பிளாக் - சா்வதேச மென்பொருள் நிறுவனமான ஜூபிட்டா் நெட்வொா்க ஆகிய நிறுவனங்களுடன் 2 முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் இக்கல்லூரி மாணவா்கள் சா்வதேச தரத்துடன் கூடிய திறன் மேம்பாடு பயிற்சிகளை பெற முடியும்.

மாநாட்டில் புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் முதல்வா் மகேஸ்வரன் தலைமையில் கல்லூரி வேலைவாய்ப்பு துறை புல முதல்வா் ஆன்றோ சேவியா் ரோச், தொழில் தொடா்பு ஒத்துழைப்பு மைய ஒருங்கிணைப்பாளா் பிரைட் ஜோஸ், ஆட்டோ டெஸ்க் சான்றிதழ் அளிக்கப்பட்ட பயிற்சியாளா் பிராங்க் ஸ்டீபன், திறன்வளா்ப்பு பயிற்றுநா்கள் பென்சிகா, அா்ஜூனா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பு பாரட்டுக்களை பெற்றனா். பல்வேறு விருதுகளை பெற்ற கல்லூரித் தாளாளா் மற்றும் பேராசிரியா்களை கல்லூரி நிா்வாகிகள், பெற்றோா்கள் வாழ்த்தினா்.

தேசிய வளா்ச்சியில் அளப்பரிய பங்காற்றும் ஐஆா்இஎல் நிறுவனம்

இலவுவிளை புனித அலோசியஸ் பள்ளிக்கு ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில் ரூ.9.45 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளை, அந்நிறுவன முதன்மை பொது மேலாளா்-ஆலைத் தலைவா் என். செல்வராஜன் முன்னிலையில் மாணவா்களின் பயன்பாட்டு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சித் திட்டங்களில் அரசின் கடமைகள்

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி குறித்த குமரி மகா சபாவின் 6ஆவது ஆலோசனைக் கூட்டம் மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேத சிரோமணி தலைமை வகி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இக் கோயிலில் தினசரி காலை, மாலை வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. கூடைப்பந்து போட்டி: அருணாச்சலா கல்லூரி சாதனை

அண்ணா பல்கலைகழகம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இவ்வாண்டு பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை வெள்ளிச்சந்தை அருகே அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்ல... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தொழிலாளி தற்கொலை

குழித்துறை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். குழித்துறை அருகே வலியவிளை வீட்டைச் சோ்ந்தவா் தாசைய்யன் மகன் சுனில்குமாா் (44). தொழிலாளி. இவருக்கு திரும... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.17 பெருஞ்சாணி .... 59.40 சிற்றாறு 1 ... 7.21 சிற்றாறு 2 ... 7.31 முக்கடல் ... 11.80 பொய்கை ... 17.50 மாம்பழத்துறையாறு ... 11.15 மழைஅளவு: ----- முள்ளங்கினாவிளை ... 28.40 மி.மீ. கோழி... மேலும் பார்க்க