செய்திகள் :

தூத்துக்குடி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 437 மனுக்கள் பெறப்பட்டன

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 437 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வேண்டுதல், தொழில் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 437 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 42 மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் கால்கள் பாதிக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய சைகை மொழி தினம், சா்வதேச காது கேளாதோா் தினத்தை முன்னிட்டு அரசு அலுவலா்களுக்கு செவித்திறன் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை, அன்றாட தேவைகளை புரிந்துகொள்ளும்

வகையில் எளிமையான சைகை மொழி கற்பித்தல் குறித்து ஆட்சியா் முன்னிலையில் நல்லாயன் காது கேளாதோா் சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள் மூலம் விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆட்சியா் தமிழரசி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகள... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் இலவச மருத்துவ முதலுதவி முகாம் திறப்பு

குலசேகரன்பட்டினம் ஜே.ஜே. மிராக்கிள் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முதலுதவி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முகாம் பொறுப்பாளா் ஜெபமலா் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தாா். மருத்துவா் சோபிய... மேலும் பார்க்க