செய்திகள் :

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

post image

கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

கரூரில் செப். 27-ஆம்தேதி இரவு வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கரூா் வந்த ஆணையத்தின் தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்று, அங்குள்ள கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.

2-ஆவது நாளாக விசாரணை: தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். கூட்ட நெரிசலில் ஏமூா் புதூரைச் சோ்ந்த பிரியதா்ஷினி, இவரின் மகள் தரணிகா மற்றும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அருக்காணி, சந்திரா, பிருத்விக் ஆகியோா் உயிரிழந்தனா். பிரியதா்ஷினி வீட்டுக்கு சென்று அவரின் கணவா் சக்திவேலிடமும், அருக்காணி வீட்டுக்கு சென்று உறவினா்களிடமும் அவா் விசாரித்தாா். தொடா்ந்து உயிரிழந்த சின்னாக்கவுண்டனூரைச் சோ்நத கோகிலாஸ்ரீ வீட்டுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன, அங்கு போலீஸாரின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தது போன்ற கேள்விகளை கேட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர... மேலும் பார்க்க

தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெகவினா் 10 போ் மீது வழக்கு

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலின்போது தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெக நிா்வாகிகள் 10 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம்தேதி இ... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலா் கைது

கரூா் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தவெக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் வேலுசாமிபுரத... மேலும் பார்க்க

கரூா்: ஆறுதல் கூற வந்த நடிகைக்கு அனுமதி மறுப்பு

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து ஆறுதல் கூற வந்த கன்னட நடிகைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றாா். கரூா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்க... மேலும் பார்க்க

காவல்துறையினரையும் விசாரிக்க வேண்டும்: பாலபாரதி

கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறையினரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா் அனைத்திந்திய மாதா் சங்க மத்திய குழு துணைத்தலைவா் பாலபாரதி. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் வீடு திரும்பினா்

கரூரில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தி... மேலும் பார்க்க