செய்திகள் :

கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

post image

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் அவதூறு கருத்துகளையும் வதந்திகளையும் பரப்பியதாக 25 பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதில், பாஜக மாநில நிர்வாகி சகாயம் மற்றும் தவெகவைச் சேர்ந்த சிவனேசன், சரத்குமார் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரையும் செவ்வாய்க்கிழமை காலை சென்னை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் இன்று அதிகாலை சென்னை மாநகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Karur stampede: Three people who spread rumors remanded in judicial custody for 15 days

இதையும் படிக்க : பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

கோவையில் இருந்து கரூர் சென்றுகொண்டிருந்த பாஜக எம்பிக்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் கார்கள் லேசான சேதமடைந்த நிலையில், எம்பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்! முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில், முன் ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் வேல... மேலும் பார்க்க

ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் விமர்சனம்

தவெக தலைவர், நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் தோன்றுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இறந்துபோன குழந்தைகள், இளைஞர்களின... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கரூர் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தில் கைதான மாவட்ட செயலர் மதியழகன், மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.கரூரில் சனிக... மேலும் பார்க்க

பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுமதி கோரி மாவட்டச் செயலாளர் வழங்கிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் வேலுச்சாமிபு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ள... மேலும் பார்க்க