செய்திகள் :

கரூர் மரணங்கள்: ``ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி

post image

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழியும் நேற்று (செப்.29) கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

இந்த நிலையில் இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கரூர் சம்பவம் குறித்து பேசினார்.

அப்போது கனிமொழி, "கரூரில் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது. யாரையும் குறை சொல்லும் நேரம் இது இல்லை.

ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் அங்கிருந்து செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று. வன்முறையைத் தூண்டுவது உச்சக்கட்ட பொறுமையின்மை.

சமூக வலைதளங்கள் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ரணம், காயம் இன்னும் இருக்கக்கூடிய இடத்தில் தவறான விஷயங்களை சொல்லி அவர்களுக்கு மேலும் மேலும் வலிகளை ஏற்படுத்தக் கூடாது.

உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றது தி.மு.கதான். மக்களின் உயிர்தான் முக்கியமான விஷயம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாகச் செயல்பட வேண்டும். விசராணையில் உண்மை வெளிவரும். யார் மீது தவறு இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லாக் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கிறோம்.

ஆனால், அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. இதைப் பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது" என்று கூறினார்.

தவெக: "கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? விரைவில் உண்மை வெளிவரும்" - விஜய் விளக்கம்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம் ... மேலும் பார்க்க

அதிமுக: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடி -விவரம் என்ன?

செங்கோட்டையன்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மனக்கசப்பில் இருந்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ... மேலும் பார்க்க

கரூர்: "பாஜக தன் அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது'- ஹேமா மாலினி தலைமையிலான குழு குறித்து திருமா

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில், எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்திருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க தன் அரச... மேலும் பார்க்க

``விஜய்க்கு இயற்கையாகவே கூட்டம் கூடுகிறது, அதனால்'' - துரைவைகோ சொன்ன அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவற... மேலும் பார்க்க

Israel: கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட நெதன்யாகு - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: ``அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை'' - விசாரிக்க வந்த எம்.பி குழு சொல்வதென்ன?

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பே... மேலும் பார்க்க