செய்திகள் :

அதிமுக: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடி -விவரம் என்ன?

post image

செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மனக்கசப்பில் இருந்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, பேசிய செங்கோட்டையன், "அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.

அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

டெல்லி பயணம்

இதையடுத்து, அடுத்த நாளே ஹரித்துவார் செல்வதாகக் கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லியில் வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து அதிமுக-வில் நிலவும் பிரச்னை குறித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாள்களாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் செங்கோட்டையனைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கெடு விதிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த கெடு செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்,

"என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இந்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினர்.

40 பேர் நீக்கம்

ஏற்கெனவே, இரண்டாம் கட்டமாக 20-க்கும் மேற்பட்டோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்டமாக செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதில், குறிப்பாக செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்படும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொருளாளர் கந்தவேல்முருகன்,

இணைச் செயலாளர் அனுராதா,

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் செல்வம்,

இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம்,

மாவட்டப் புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் மௌதீஸ்வரன்,

மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பெரியசாமி,

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கௌசல்யாதேவி,

துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி,

மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் ராயண்ணன்,

மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் முத்துசாமி

என 40 பேர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதற்குப் பதிலடியாக அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி வருவது ஈரோடு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக: "கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? விரைவில் உண்மை வெளிவரும்" - விஜய் விளக்கம்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம் ... மேலும் பார்க்க

கரூர்: "பாஜக தன் அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது'- ஹேமா மாலினி தலைமையிலான குழு குறித்து திருமா

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில், எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்திருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க தன் அரச... மேலும் பார்க்க

``விஜய்க்கு இயற்கையாகவே கூட்டம் கூடுகிறது, அதனால்'' - துரைவைகோ சொன்ன அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவற... மேலும் பார்க்க

Israel: கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட நெதன்யாகு - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ``ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: ``அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை'' - விசாரிக்க வந்த எம்.பி குழு சொல்வதென்ன?

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பே... மேலும் பார்க்க