செய்திகள் :

கரூர் சம்பவம்: ``அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை'' - விசாரிக்க வந்த எம்.பி குழு சொல்வதென்ன?

post image

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கரூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஜே.பி நட்டா அமைத்ட குழு அறிக்கை
ஜே.பி நட்டா அமைத்ட குழு அறிக்கை

ஜெ.பி.நட்டா அமைத்த குழு

இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை ஜே.பி நட்டா அமைத்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு தற்போது கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. 

இவர்களைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

கரூர் துயரம் - தவெக
கரூர் துயரம் - தவெக

ஹேமமாலினி பேசியது என்ன?

கோவை விமான நிலையத்தில் ஹேமமாலினி, "நாங்கள் அனைவரும் கரூரில் என்ன நடந்தது, எதனால் இந்தச் சம்பவம் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்.

இந்தச் சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் வந்திருக்கிறோம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் செல்ல இருக்கிறோம்.

பின்னர், ஆய்வு செய்த தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிப்போம்" என்று பேசினார்.

"எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை நாங்கள் இங்கு இருப்போம்" என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

அதிமுக: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடி -விவரம் என்ன?

செங்கோட்டையன்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மனக்கசப்பில் இருந்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ... மேலும் பார்க்க

கரூர்: "பாஜக தன் அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது'- ஹேமா மாலினி தலைமையிலான குழு குறித்து திருமா

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில், எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்திருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க தன் அரச... மேலும் பார்க்க

``விஜய்க்கு இயற்கையாகவே கூட்டம் கூடுகிறது, அதனால்'' - துரைவைகோ சொன்ன அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவற... மேலும் பார்க்க

Israel: கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட நெதன்யாகு - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ``ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

காசா விவகாரம்: ``அமைதியை நிலைநாட்ட ட்ரம்பின் முயற்சியை ஆதரிப்போம்'' - பிரதமர் மோடி புகழாரம்

ட்ரம்ப் பரிந்துரைத்த போர் நிறுத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க... மேலும் பார்க்க