செய்திகள் :

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

post image

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சிக்குள்பட்ட வண்டிப்பாதை என்ற இடத்தில் சாலையோரம் சுமாா் 40 ஆண்டுகளாக ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் ஒவ்வொரு ஆட்சியின் போதும் அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்து தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்து வருகின்றனா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் சிலருக்கு மட்டும் அவா்கள் வசிக்கும் இடங்கள் அளக்கப்பட்டு வீட்டுமனைப் பட்டா வழங்க வருவாய்த்துறை சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவா்களை விட்டுவிட்டு ஒருசிலருக்கு மட்டும் அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பட்டா வழங்க வருவாய்த்துறை முடிவு செய்திருப்பதாகக் கூறி மனுக்களை வழங்கினா். மேலும் அந்த மனுவில் கட்சி பாரபட்சமின்றி அந்தப் பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் முறையாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

‘கருப்புப் பட்டை‘ அணிந்து பணிபுரிந்த வருவாய்த் துறையினா்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘கருப்புப் பட்டை’ அணிந்து வருவாய்த் துறை சங்கங்களின் கட்டமைப்பினா் திங்கள்கிழமை பணிபுரிந்தனா். பழைய ஓய்வூதியம், காலிப் பண... மேலும் பார்க்க

யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உரம் விற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம்

கொடைக்கானலில் சன் அரிமா சங்கம் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநா் டி.பி. ரவீந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். ம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு

பழனி மலைக் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்வுக்கு சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டுச் செல்வதால் புதன்கிழமை (அக். 1) பிற்பகலில் நடை அடைக்கப்படும். வியாழக்கிழமை முதல் நவராத்திரி விழாவ... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு

வடமதுரை அருகே பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்களை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த சுக... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகள் திருட்டு

நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ள கைப்பேசிகடைக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே... மேலும் பார்க்க