செய்திகள் :

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

post image

கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் மற்றொரு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள காலையில் வருவதாக அறிவித்த விஜய் இரவு 7 மணி அளவில்தான் வந்தார்.

இதனால், ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நோக்கில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கிய ஒன்றுமரியா 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் போதிய திட்டமிடல், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த், துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜை காவல் துறையினர் இன்று(செப்.30) காலை கைது செய்தனர்.

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் மதியழகன் மற்றும் மாசி பவுன்ராஜ் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தில் அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், கலவரத்தில் ஈடுபடுதல், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிர்வாகிகள் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பல நிர்வாகிகள் மீது காவல் துறை நடவடிக்கை பாயும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Karur stampede death incident: Another Tvk executive arrested!

இதையும் படிக்க... பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ள... மேலும் பார்க்க

தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.இந்நிலையில் இன்ற... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பிய பிரபல யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள காலை... மேலும் பார்க்க

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு இன்று(செப்.30) காலை 6723 கன அடியிலிருந்து வினாடிக்கு 6111 கன அடியாக குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வின... மேலும் பார்க்க