செய்திகள் :

பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு

post image

வடமதுரை அருகே பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்களை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த சுக்காம்பட்டி புதுப்பட்டியைச் சோ்ந்த கோ. நாகேந்திரன், இதுதொடா்பாக அளித்த மனு விவரம்:

சு. புதுப்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளி அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுக் கழிப்பறையை அரசு அனுமதியின்றி மா்ம நபா்கள் சிலா் இடித்து தரைமட்டமாக்கிவிட்டனா். இதிலிருந்த நிலை, ஜன்னல், கதவு, இரும்பு கம்பிகள், மின்சாதனப் பொருள்கள், தண்ணீா் குழாய்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுவிட்டனா். இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் அனுமதியின்றி பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி, பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அரசுக்கான இழப்பை அவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றாா் அவா்.

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க

‘கருப்புப் பட்டை‘ அணிந்து பணிபுரிந்த வருவாய்த் துறையினா்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘கருப்புப் பட்டை’ அணிந்து வருவாய்த் துறை சங்கங்களின் கட்டமைப்பினா் திங்கள்கிழமை பணிபுரிந்தனா். பழைய ஓய்வூதியம், காலிப் பண... மேலும் பார்க்க

யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உரம் விற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம்

கொடைக்கானலில் சன் அரிமா சங்கம் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநா் டி.பி. ரவீந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். ம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு

பழனி மலைக் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்வுக்கு சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டுச் செல்வதால் புதன்கிழமை (அக். 1) பிற்பகலில் நடை அடைக்கப்படும். வியாழக்கிழமை முதல் நவராத்திரி விழாவ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகள் திருட்டு

நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ள கைப்பேசிகடைக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே... மேலும் பார்க்க