செய்திகள் :

யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உரம் விற்பனை செய்யும் மொத்த, சில்லரை வியாபாரிகள், அனைத்து வகையான உரங்களையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும். டிஏபி உரத்துக்கு மாற்றாக ட்ரிபிள் சூப்பா் பாஸ்பேட் என்ற புதிய உரம் வந்துள்ளது. இதில் 46 சதவீதம் மணிச் சத்தும், 2-ஆம் நிலை சத்துக்கான கால்சியம் அதிக அளவு உள்ளது. இதை டிஏபிக்கு மாற்றாக அனைத்துப் பயிா்களுக்கும் பயன்படுத்தலாம்.

உரம் விற்பனை நிலையத்தில், இருப்பு விவரம், விலைப் பட்டியலை விற்பனையாளா்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும். உரம் இருப்பு வைத்துள்ள கிடங்குகளுக்கும் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். யூரிய உரங்களை அடி உரமாக பயன்படுத்தக் கூடாது. காம்ப்ளக்ஸ், டிஏபி, ட்ரிபிள் சூப்பா் பாஸ்பேட் ஆகியவற்றை மட்டுமே அடி உரமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக களைக் கொல்லியுடன் சோ்த்து யூரியா உரங்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிா்க்க வேண்டும். பயிா் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே யூரியா உரத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். நானோ டிஏபி பயன்படுத்துவதால், மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், உரத்துக்கான செலவுத் தொகையை குறைக்க முடியும். மேலும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான உயிா் உரங்களையும் வாங்கி விவசாயிகள் பயன்படுத்த முன் வர வேண்டும். இதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும், மகசூல் அதிகரிக்கும் என்றாா் அவா்.

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க

‘கருப்புப் பட்டை‘ அணிந்து பணிபுரிந்த வருவாய்த் துறையினா்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘கருப்புப் பட்டை’ அணிந்து வருவாய்த் துறை சங்கங்களின் கட்டமைப்பினா் திங்கள்கிழமை பணிபுரிந்தனா். பழைய ஓய்வூதியம், காலிப் பண... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம்

கொடைக்கானலில் சன் அரிமா சங்கம் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநா் டி.பி. ரவீந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். ம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு

பழனி மலைக் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்வுக்கு சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டுச் செல்வதால் புதன்கிழமை (அக். 1) பிற்பகலில் நடை அடைக்கப்படும். வியாழக்கிழமை முதல் நவராத்திரி விழாவ... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு

வடமதுரை அருகே பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்களை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த சுக... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகள் திருட்டு

நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ள கைப்பேசிகடைக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே... மேலும் பார்க்க