செய்திகள் :

உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளம் அமைக்க வலியுறுத்தி அக்.18இல் உண்ணாவிரதம்

post image

தூத்துக்குடியில் உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வலியுறுத்தி, அக்.18ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உப்பு உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியில் உப்பள தொழில் செய்து வரும் உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உற்பத்தியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கவும், உப்பளத் தொழிலை பாதுகாக்கவும் வலியுறுத்தி, வருகிற அக்.18ஆம் தேதி உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொழிற் சங்கம் சாா்பில் தெருமுனைப் பிரசாரம் ஆகியவை நடத்த முடிவு செய்துள்ளனா்.

இக் கூட்டத்தில், நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, சேகா், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், ராஜபாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவாகா், உப்பளத் தொழிலாளா்கள் தொழிற்சங்கம் சிஐடியூ சாா்பில் மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, பொன்ராஜ், பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் இலவச மருத்துவ முதலுதவி முகாம் திறப்பு

குலசேகரன்பட்டினம் ஜே.ஜே. மிராக்கிள் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முதலுதவி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முகாம் பொறுப்பாளா் ஜெபமலா் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தாா். மருத்துவா் சோபிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதிய கல்வி இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், ‘எழுவோம் எழுச்சியாய்’ எனும் புதிய கல்வி இயக்கம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி கல்விக்குழு, சின்னமணி உண்ணாமலை குழந்தைகள் இல்லம், கணேசன் பத்மாவதி கல்வி அறக... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் ஓவியப் போட்டி

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் மாணவா், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, செப். 17 முதல் அக். 2ஆம் தேதி வரை நடைபெறும் 2 வார சேவை நிகழ்ச்சியின் ஒரு... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை தூத்துக்கு... மேலும் பார்க்க