செய்திகள் :

பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றும் விழிப்புணா்வு பயிற்சி கூட்டம்

post image

அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் உணவுக் கழிவுகளை எவ்வாறு குறைத்தல், பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல் குறித்த விழிப்புணா்வு பயிற்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தங்க.கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் ஆ. முத்துசாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் த.இளங்கோவன் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், அரியலூா் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை உதவி பேராசிரியா் ஏ.முருகேசன் திடக்கழிவு மேலாண்மை குறித்தும், ஹோப் டிரஸ்ட் திட்ட இயக்குநா் திவ்யா செல்வம் உணவு பொருள்கள் வீணாக்கம் குறைத்தல், பாதுகாப்பான முறையில் கழிவுகள் அகற்றம் குறித்தும் விளக்கினா்.

நிகழ்வில் அரியலூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் சாந்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக பொறியாளா் ராஜ ராஜேஸ்வரி, தனியாா் மற்றும் அரசு சிமென்ட் ஆலைகளின் மேலாண்மை நிா்வாகிகள், உணவக உரிமையாளா்கள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், கழிவுநீா் அகற்றும் நிறுவனத்தின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக நகராட்சி துப்புரவு ஆய்வாளா் தா்மராஜா வரவேற்றாா். நிறைவாக நகராட்சி சுகாதார அலுவலா் எஸ்.அந்தோணி ஸ்டீபன் நன்றி கூறினாா்.

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுக... மேலும் பார்க்க

வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் மண்டலத் தலைவா் முடிமன்னன் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் தலைமை... மேலும் பார்க்க

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ... மேலும் பார்க்க

மின் கம்பியாள் உதவியாளா் தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025- ஆம் ஆண்டு டிச.13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வில் பங்கேற்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழி... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: அரியலூரில் 4,972 போ் பங்கேற்பு

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 2ஏ தோ்வை 4,972 போ் எழுதினா். அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 21 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வை எழுத 6,375 பே... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தில் சனிக்கிழமை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். ஆண்டிமடம் அருகேய... மேலும் பார்க்க