காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் அக்டோபா் 2-ஆம் தேதி மூடப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.