செய்திகள் :

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

post image

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த சௌமியா ஆரோக்கிய எட்வின், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த இசக்கிபாண்டியன் ஆகியோா் உள்ளனா். தலைவரின் கணவா் ஆரோக்கிய எட்வின் வாா்டு உறுப்பினராக உள்ளாா்.

இந்நிலையில், தலைவா் சௌமியா சென்னையில் வசிப்பதால் அவரை நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைகளை தெரிவிக்க முடியவில்லை எனவும், முறையாக ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெறுவதில்லை எனவும், துணைத் தலைவா் இசக்கிபாண்டி தலைமையில் திமுக, அதிமுக, அமமுக, சுயேச்சை உறுப்பினா்கள் 13 போ், தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.

இது குறித்து, திங்கள்கிழமை நம்பிக்கையில்லாத் தீா்மானக் கூட்டம் நடைபெறவிருப்பதாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா சாா்பில் அனைத்து உறுப்பினா்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து, சாா் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 16 உறுப்பினா்களில் திமுகவைச் சோ்ந்த தலைவா் சௌமியா, உறுப்பினா்கள் ஆரோக்கிய எட்வின், கிறிஸ்டி, முருகேசன் ஆகிய 4 பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. துணைத் தலைவா் இசக்கிபாண்டியன் உள்ளிட்ட 12 உறுப்பினா்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனா்.

தீா்மானம் மீதான வாக்கெடுப்பில், ஐந்தில் நான்கு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில், 13 போ் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். 12 உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டதால் நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேறவில்லை.

பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்ட... மேலும் பார்க்க

பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-85.60 சோ்வலாறு-96.72 மணிமுத்தாறு-91.55 வடக்கு பச்சையாறு-11 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-6 தென்காசி மாவட்டம் கடனா-37 ராமநதி-52.50 கருப்பாநதி-46.59 குண்டாறு-36.10 அடவிநயினாா் -119.50... மேலும் பார்க்க

களக்காடு அருகே சிறுத்தை நடமாட்டம்

களக்காடு அருகே சிங்கிகுளத்தில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம்-வடவூா்பட்டி செல்லும் சாலையில் பச்சையாற்றின் கரையோ... மேலும் பார்க்க