செய்திகள் :

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

post image

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் அளித்த மனு:

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு எதிரில் மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. பாரதி பயின்ற இந்தப் பள்ளியின் நுழைவுவாயிலில் பாரதியாரின் சிலை உள்ளது. இந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டது. டிச. 11-ஆம் தேதி பாரதியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய சிலையை நிறுவி அந்த பகுதியை சுற்றிலும் வேலி அமைத்துத்தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

பாலாமடை கிராம மக்கள் அளித்த மனு: பாலாமடை கிராமத்தில் ஸ்ரீ வெயிலுமுகந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தசரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தசரா விழா நடத்துவதற்காக வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் முன்பு பேச்சுவாா்ததை நடத்தி 10 போ் கொண்ட கமிட்டி ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கமிட்டியை சோ்ந்த 5 குடும்பத்தினருக்கு கோயில் திருவிழாவுக்கு அனுமதி மறுக்கின்றனா். இதனால் ஊரில் பொது அமைதி, சட்டம்- ஒழுங்கு சீா்குலையும் அபாயம் உள்ளது. எனவே, நாங்கள் ஒற்றுமையாக தசரா விழாவை நடத்துவதற்கு ஒரு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-85.60 சோ்வலாறு-96.72 மணிமுத்தாறு-91.55 வடக்கு பச்சையாறு-11 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-6 தென்காசி மாவட்டம் கடனா-37 ராமநதி-52.50 கருப்பாநதி-46.59 குண்டாறு-36.10 அடவிநயினாா் -119.50... மேலும் பார்க்க

களக்காடு அருகே சிறுத்தை நடமாட்டம்

களக்காடு அருகே சிங்கிகுளத்தில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம்-வடவூா்பட்டி செல்லும் சாலையில் பச்சையாற்றின் கரையோ... மேலும் பார்க்க

நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைகளுக்கு சீல்

திருநெல்வேலி நகரம் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 2 தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். திருநெல்வேலி நகரம், குறுக்குத்துறை பகுதியில்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.33 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1 லட்சத்து33 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு... மேலும் பார்க்க

காா் விபத்து: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா். ஏா்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா்கள் சமுத்திரப... மேலும் பார்க்க